Sunday, July 10, 2016

கலப்படம்


“நான் சூப்பர் மார்க்கெட்டில்தான் பொருட்களை வாங்குகிறேன். கலப்படம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று சிலர் கூலாகச் சொல்வார்கள். அதிக விலைகொடுத்து வாங்கினால் கலப்படம் இருக்காது என்பதும் பலரின் நம்பிக்கை. உண்மையில் பாலில் தொடங்கி பனீர் வரை  எங்கும் எதிலும் எப்போதும் கலப்படம்தான். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பிராண்டுகளில் சர்வசாதாரணமாகக் கலப்படங்களைச் செய்கிறார்கள் கலப்பட மன்னர்கள். தரம் குறைந்த பொருட்களை வாங்கிவந்து, செயற்கை நிறம் கலந்தும் பாலீஷ் செய்தும் தரமான பொருட்களைப் போல விற்கிறார்கள்.
குறைவான விலை என்பதாலும், நம்மை எல்லாம் ஒன்றும் செய்யாது எனும் அசட்டு நம்பிக்கை காரணமாகவும் கலப்படப் பொருட்கள் விற்பனை எந்தத் தடையும் இன்றி நடந்துகொண்டே இருக்கிறது.
கலப்படம் என்பது, ஆரோக்கியத்தை அசைத்துப்பார்த்து, உயிருக்கே உலைவைத்துவிடும் மரண வியாபாரம். அது ஒரு சமூக அநீதி எனும் புரிதலும் விழிப்புஉணர்வும் விற்பவர்களுக்கும் தேவை. நுகர்வோருக்கும் தேவை.
கலப்படத்தைக் கண்டறிய…
டீ  – கடைகளில் பயன்படுத்திய டீ தூள் கசடை (Tea dust) குறைவான விலைக்கு வாங்கி, அதை வெயிலில் உலர்த்தி, சிவப்பு நிறம் சேர்த்து விற்கின்றனர். குறைவான விலையில் கிடைக்கும் டீ தூள்களில், இந்த சிவப்பு நிறம் கலக்கப்படுகிறது. சாதாரண ஃபில்டர் பேப்பரில் டீ தூளைக் கொட்டி, நான்கு துளிகள் நீர் விட்டால், சிவப்பு நிறம் தனியே பிரிவது தெரியும். குறிப்பாக, ஊர்களை மையப்படுத்தி விற்கும் ஸ்பெஷல் டீ தூள்கள் பெரும்பாலும் கலப்படங்களே.
கடுகு – தரமான கடுகை, கைகளில் வைத்து அழுத்திப்பார்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருக்கும். கசகசா வகையைச் சார்ந்த அர்ஜிமோன் விதைகள் கலக்கப்பட்டிருந்தால், கைகளில் நசுங்கும்போது, அதன் உட்புறம் வெள்ளையாக இருக்கும்.
மஞ்சள் தூள் – மஞ்சள் தூளில், ஸ்டார்ச் பவுடர் மற்றும் மெட்டானில் எல்லோ எனும் ரசாயனம்  கலக்கப்படுகின்றன. அரை ஸ்பூன் மஞ்சள்தூளை, 20 மி.லி இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் இரண்டு துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்தில் நீர் மாறினால், அதில் மெட்டானில் எல்லோ கலந்திருப்பதை உறுதி செய்யலாம்.
பச்சைமிளகாய், பச்சைப் பட்டாணி – பச்சைமிளகாய், குடமிளகாய் போன்றவை அதிகப் பச்சையாகத் தெரிவதற்காக, மாலசைட் கிரீன் (Malachite green) எனும் ரசாயனத்தில் முக்கி விற்கப்படுகின்றன. இதேபோல, உலர் பட்டாணி ஊறவைக்கப்பட்டு, மாலசைட் கிரீன் கலந்து ஃப்ரெஷ்ஷாக இருப்பதுபோல் விற்கப்படுகிறது. இவற்றை வெந்நீரில் போட்டதும் பச்சை நிறம் வெளியேறினால், அதில் மாலசைட் கிரீன் கலந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
பட்டை – பட்டையில், கேசியா (Casia), சுருள் பட்டை (Cinnamon) எனும் இரு வகைகள் உள்ளன. இதில், சுருள் பட்டையில்தான் சத்துக்கள் உள்ளன. கேசியா பட்டையில் சாதாரண மரப்பட்டைகள் நிறம் சேர்த்துக் கலக்கப்
படுகின்றன. ஓரிரண்டு  பட்டையைக் கசக்கிப் பார்த்தால், கைகளில் எந்த நிறமும் ஒட்டக் கூடாது.
மிளகு – பப்பாளி விதைகளைக் காயவைத்தால், மிளகு போலத் தெரியும். அதை, மிளகில் சேர்த்து விற்கின்றனர். அதேபோல, பழைய மிளகில் மினரல் ஆயில் எனப்படும் பெட்ரோலியப் பொருள் கலக்கப்பட்டு, மெருகேற்றப்படுகிறது. மிளகு பார்ப்பதற்குப் பளபளப்புடன் மின்னக் கூடாது. முகர்ந்துபார்த்தால்  கெரசின் வாடை  அடிக்கக் கூடாது. கண்ணாடி டம்ளரில் 50 மி.லி தண்ணீரை ஊற்றி, அதில் மிளகைப் போட வேண்டும். மூழ்கினால் அது உண்மையான மிளகு, மிதந்தால் அது பப்பாளி விதை.
சீரகம் – சீரகத்தில், குதிரைச் சாணம் சேர்க்கப்படுகிறது. தவிர, அடுப்புக் கரியும் சேர்க்கின்றனர். சீரகத்தைத் தண்ணீரில் போட்டால், சாணம் கரைந்துவிடும். சீரகத்தைக் கையில் வைத்துத் தேய்க்கும்போது, கறுப்பாக மாறினால், அதில் அடுப்புக் கரி சேர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சீரகம் போன்ற தோற்றம்கொண்ட ‘சதகுப்ப’ எனும் பொருளையும் சேர்த்து விற்பனை செய்கின்றனர். இதைப் பரிசோதனைக்கூடத்தில் மட்டுமே கண்டறிய முடியும்.
டீலக்ஸ் தனியா – தனியா அடர்பழுப்பாக இருக்கும். ஆனால், டீலக்ஸ் தனியா என்பதை வெள்ளையாக மாற்ற, சல்பர் டை ஆக்சைட் சேர்க்கப்படுகிறது. வெள்ளையாக்கப்பட்ட தனியாவைத் தவிர்த்துவிடலாம். அதுபோல, ஒரு ஸ்பூன் தனியா தூளில் தண்ணீர் விடும்போது, மேலாக தூசு போல படிந்தால் அதில் மரத் தூள் கலந்திருக்கலாம்.
ஜவ்வரிசி – மஞ்சள் நிறமாக இருக்கும் ஜவ்வரிசி டினோபால் போன்ற, பளீர் வெள்ளை நிறத்தைத் தரும் ரசாயனங்களால் தீட்டப்
படுகிறது. சிறிது மஞ்சளாக இருக்கும் ஜவ்வரிசியைப் பயன்படுத்துங்கள்.
பால் – அதிகாலை கறக்கும் பால் சில்லிங் சென்டருக்கு போகும் வரையில் கெட்டுப்போகாமல் இருக்க, யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. பாலையும் தண்ணீரையும் 10 மி.லி அளவில் சமமாகக் கலக்கும்போது, நுரை வந்தால் அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கலாம். மேலும், அருகில் விற்கும் பால்காரரிடம் பால் வாங்குவதே கலப்படங்களிலிருந்து தப்பிக்க எளிய வழி.
மிளகாய்த் தூள் – இதில், புற்றுநோயை உண்டாக்கும் சூடான் டை கலக்கப்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூளைக் கலக்குங்கள். அதில் பளீர் சிவப்பு வண்ணம் வெளிவந்தால், அதில் சிவப்பு வண்ணம் கலந்திருக்கலாம்.
தேங்காய் எண்ணெய் – தேங்காய் எண்ணெயைக் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வையுங்கள். தடிமனான திக்கான படிமம் எண்ணெயின் மேல் படிந்தால், அது சுத்தமான தேங்காய் எண்ணெய். நீர்த்த நிலையில் அப்படியே இருந்தால், அதில் மலிவான எண்ணெய்கள் கலக்கப்பட்டிருக்கின்றன.

தேன் – பஞ்சைத் தேனில் நனைத்து, நெருப்பில் காட்டும்போது, பஞ்சு எரிந்தால் நல்ல தேன். எரியும்போது சடசடவென சத்தம் வந்தால், அது கலப்படத் தேன். தேனைத் தண்ணீரில் விட்டால், கரையாமல் அடி வரை சென்று தங்கும். கரைந்தால், அது வெல்லப்பாகு.
காபி பொடி – ஒரு கிளாஸ் தண்ணீரில் காபி பொடியைப் போட்டதும், காபி பொடி மேலே மிதக்கும். சிக்கரி கலந்திருந்தால், நீரில் மூழ்கும்.
எண்ணெய் – எண்ணெயை ரீஃபைண்ட் செய்ய, பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தலாம். எண்ணெயில், 20 சதவிகிதம் அளவுக்கு வேறு ஒரு எண்ணெயைக் கலக்கலாம். அரசின் இந்த அனுமதி, பல கலப்படங்களுக்குக் காரணமாக இருக்கிறது.
தோசை மாவு – மாவு புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிகேட் சேர்க்கப்படுகிறது. இதில் சுகாதாரமற்ற தண்ணீர் சேர்ப்பதால் இ-கோலை பாக்டீரியா (மலக்கழிவில் இருக்கும் கிருமி) இருக்கும். பல நோய்களை உருவாக்கும் கிருமி இது. எனவே, வீட்டில் மாவு அரைத்துச் சாப்பிடுவதே நல்லது.
பனீர் – ஒரு கப் தண்ணீரில் ஒரு பனீர் துண்டைப் போட்டுக் கொதிக்கவிடுங்கள். ஆறியதும், சில துளிகள் அயோடின் சொல்யூஷன் கலக்கவும். பனீர் நீல நிறமாக மாறினால், அது கலப்படம். பனீர் தயாரிக்கப்பட்ட பாலில் கஞ்சி, மாவுப் பொருட்கள் (Starch) கலந்திருக்கலாம்.
நெய் – வனஸ்பதி அல்லது வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு கலந்திருக்கும். இதைப் பரிசோதனை மையங்களில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெண்ணெயை வாங்கிக் காய்ச்சுவது நல்லது.
யாரிடம் புகார் செய்யலாம்?
தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் உள்ளன. வாங்கும் பொருட்களால், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அந்த ஊரில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். எந்தப் பொருளால் உடல்நலக் கேடு ஏற்பட்டதோ, அந்த இடத்துக்குச் சென்று, அந்த உணவின் சாம்பிளைப் பரிசோதனை செய்வர். ரிப்போர்ட்டில் கலப்படம் எனத் தெரிந்தால், விற்றவர் மற்றும் தயாரித்தவர் மேல் வழக்குப் போடப்படும். பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமும் பரிசோதனைக்குச் செலவான பணமும் திரும்ப வழங்கப்படும். நுகர்வோருக்கு உண்டான அலைச்சல், மன உளைச்சலுக்குத் தகுந்த தொகை தரப்படும்.
பாதிப்புகள்
உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் அனுமதிக்கப்படாத வண்ணங்கள் புற்றுநோய்க்குக் காரணமாகலாம். அர்ஜிமோன் விதைகள், பெட்ரோலிய பொருளான மினரல் ஆயில் போன்றவையும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதே. ஆப்பிள் மேல் பூசப்படும் மெழுகில் ‘லெட்’ இருக்கிறது. இது வாந்தி, வயிற்றுப்போக்கில் தொடங்கி நரம்பு மண்டலத்தையே பாதிக்கலாம். உணவால் ஏற்படும் கழிவுகளைச் சிறுநீரகமும் கல்லீரலும் சுத்தம் செய்கின்றன. வீரியமுள்ள ரசாயனங்களால் இந்த இரண்டு உறுப்புகளும் பாதித்து, செயலிழந்து போக நேரிடும். எப்போதோ ஓரிரு முறை கலப்பட உணவுகளைச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. மாதங்கள், ஆண்டுகள் எனத் தொடர்ந்து சாப்பிடும்போது, உடல்நலம் கெடுவது உறுதி. உடலை உருக்குலைக்கும் நோய்களுக்கான வாசலும் இதுவே.
:)

Sunday, June 5, 2016

DIABETES CAN BE CURED - நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும்.

The moment i say that diabetes can be cured - people look at me as if i am a quack or a cheat.
A doctor who will NEVER cure you - but only helps to keep your sugar under control - is he cheating you or the person who offers you treatment to get cured of your illness is a cheat?
The medicines that your trusted doctor gives you to keep your sugar under control - slowly works its "magic" in destroying your kidneys, spleen and heart - your eyesight gets weakened - you may have to amputate your legs. All these are PROOF that the system is wrong. A doctor who give you medicines and treatment - KNOWING FULLY WELL THAT HE CANT CURE YOU - is he a cheat or me? He is just robbing you and making your condition worse.
Often, new patients who come to me - justify it by saying -millions of people are taking that medicine...thats y i am taking it too. Out of those millions, how many were cured? If none, so y do you? 
Some others say "even BIG doctors are saying that diabetes cannot be cured" - Every one of those big doctor is just repeating what their masters have taught them to say. They are not researchers. Their system is a failure which keeps repeating that diseases cannot be cured. They are not interested in CURING - they are just interested in CREATING CUSTOMERS.
I have not directly blamed any system. I just wish people get cured - instead of wasting their time, money, limbs and life.
Come over and get rid of your disease and become healthy again.
God Bless.

Sunday, April 24, 2016

வாதம்-பித்தம் -கபம்


”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்? ஒருவேளை ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு...”,என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய ’கூகிள்’ தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த ”வாதம் பித்தம் கபம்” எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. ”ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது,” என்ற அறிவை வளர்க்கும் நாம், “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.
”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு ”காமன் வெல்த்”திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.

இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்“ நான்”-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.

அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

Thursday, April 7, 2016

குளியல்

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.

வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை,

எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி.
நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது..

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.

நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... !  நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

நலம் நம் கையில்

நன்றி

DoctorEmmanuel.blogspot.in

Tuesday, March 29, 2016

நீ நீயாக இரு

நீ நீயாக இரு...
°=°=°=°=°=°=°=°=°=°=

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் மனம் கொண்டு
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவரின் ஆசையில்
நீ சுகப்படாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கண் கொண்டு
உலகைப் பார்க்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கனவை
நீ காணாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் ஆசையை
உனதாக்கிக்கொள்ளாதே...
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வாழ்வை
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் சிந்தனை கொண்டு
நீ சிந்திக்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வழியை
உனதாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !

 நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் நிழலை
உன் நிழலாக ஆக்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் பாணியை
உன் பாணியாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு . . .
உனக்கென்று தனித்தன்மை உண்டு . . .
அதை இழந்துவிடாதே . . .

நீ . . .நீயாக இரு !
அடுத்தவராய் நீ மாறினால்,
உன்னால் ஆனந்தப்படமுடியாது . . .

நீ . . .நீயாக இரு !
நீ நீயாக இருப்பதில்
நேர்த்தியைக் கொண்டு வா . . .

நீ . . .நீயாக இரு !
அப்பொழுதுதான் நீ
உலகில் அபூர்வமாகத் தெரிவாய் . . .

நீ . . .நீயாக இரு !
சூரியன் சந்திரனாவதில்லை . . .
சந்திரன் நட்சத்திரமாவதில்லை . . .

நீ . . .நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .

ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்யமுடியாது . . .

அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .

எனவே நீ . . .நீயாக இரு !

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .

தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?

நீ . . .நீயாக இரு !

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .

ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !

நீ . . .நீயாக இரு !

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .

ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !

நீ . . .நீயாக இரு !

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .

ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !

நீ . . .நீயாக இரு !

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .

ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !

நீ . . .நீயாக இரு !

நேற்று போல் இன்றில்லை . . .

இன்று போல் நாளையில்லை . . .

அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !

எனவே நீ . . .நீயாக இரு !

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !

அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !

அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !

அதில் பாபம் ஏதுமில்லை !

அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !

 உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாகவே இரு !

நீ . . .நீயாக மட்டுமே இரு

°=°=°=°=°=°=°=°=°=°=°

Saturday, March 12, 2016

Dr B M Hegde on Coconut Oil



papaya

பப்பாளி

கல்லீரல்,மண்ணீரல்,கணையம் ஆகியவை பலம் பெற வேண்டுமா?

பசி தூண்டப்பட்டு,ஜீரண சக்தியும் அதிகரிக்க வேண்டுமா?

பொதுவான உடல்வலிகளில் இருந்து விடுபட வேண்டுமா?

கருப்பையில் இருக்கும் அழுக்குகள், கிருமிகள்,சிறுகட்டிகள்,சதை வளர்ச்சி நீங்க வேண்டுமா?

ஊளைச்சதை குறைந்து உடல் மெலிய வேண்டுமா?தொப்பை காணாமல் போக வேண்டுமா?

கண் பார்வை தெளிவு பெற வேண்டுமா?

புற்று நோய் அபாயம் நீங்க வேண்டுமா?

ரொம்ப சிம்பிள், தினம் நூறு கிராம் அளவுக்கு பப்பாளிப்பழத் துண்டுகள் சாப்பிட்டு வாங்க,போதும். மேலே கூறிய பிரச்சினைகள் குறித்த கவலை வேண்டாம்.

Wednesday, February 24, 2016

CHOLESTROL LOWERING DRUGS CAN CAUSE DIABETES!!!!

These days, it is easy to see people standing by the sidewalk on busy streets and parks and other such places where people gather. These people stand under a huge umbrella - they have a weighing machine. they will measure your height and weight on the spot - do a BMI calculation and then ask you to come to a specific nutritionist.

The free test on the sidewalk then turns into a costly bill of food supplements, diet and exercises (which necessarily use equipments on sale with the nutritionist)

One of the problems that millions of Indians today are frightened about is CHOLESTROL - it is surprising to know how many people are even aware of Good cholestrol and bad cholestrol. I have patients who walk in with extensive knowledge of LDL and HDL.

Cholestrol lowering drugs are usually STATINS. And there is a huge risk attached to intake of statins.

1. Liver Damage
2. Loss of Memory and other brain impairment (whcih will reverse if you stop taking statins)
3. Diabetes
4. Muscle Damage.

You may reduce cholestrol but may end up with defective brain or liver or even muscle atrophy!!!

Every patient who takes statin increases his risk of getting Diabetes.

So be aware folks - a little bit of fat is better than just a  little bit of brain


Sunday, February 21, 2016

Johnson & Johnson Finally Admits: Their Baby Products Contain Cancer-Causing Chemicals

"Children are our future" as Whitney Houston sang so passionately in the mid 80s. If this is true (and it most definitely is), why are trusted corporations, headed by mothers and fathers just like you and me, selling potentially cancer-causing baby products? Any kind of carcinogenic material shouldn't come into contact with things we put in and on our bodies, at any age. In infancy, the most vulnerable time in our lives (spare a major illness potentially caused by these products), exposure to some of the chemicals Johnson & Johnson has just admitted to using could spell disaster.

So What's In It?

Formaldehyde has been detected in Johnson & Johnson products. Studies suggest it may cause cancerand it is in your baby's shampoo. The chemical is commonly used as an embalming agent when preparing a corpse for burial. What is it doing in consumer-use products, you ask? The "why" is unclear but the "how" is quaternium-15. This ingredient releases formaldehyde, which is known to cause skin, eye and respiratory irritation. It has also been tied to leukemia.
 
"The North American Content Dermatitis Group considers quaternium-15 to be among the most clinically significant contact allergens in children"


But Wait! There's More

Johnson & Johnson has another dangerous chemical in their cocktail of potentially cancer-promoting chemicals. 1,4-dioxane is also part of the mix and it too has carcinogenic properties. This gem is a brain toxin that can cause damage to the central nervous system, liver and kidneys.
 
 

Inconsistent Regulation

Analytical Sciences, an independent laboratory hired by The Campaign for Safe Cosmetics, has tested several of J&J baby products. They found that the samples from the U.S. had low levels of the chemicals in their initial report. However, according to Lisa Archer, director of the Campaign for Safe Cosmetics, subsequent consumer groups in Sweden, Japan, and South Africa contacted the group to note that quaternium-15 was not being used in ANY products sold in those countries.
Archer noted that there are strict bans on these chemicals in consumer products in some countries, but not others.


Time To Start Reading The Fine Print

Reading ingredients and looking them up may be your best defense. That or making your own baby products out of natural items. It's hard enough to be a parent, and now it's just gotten a little harder. However, if you get a routine going, you can make a huge difference in the future health of your child.

FASTING CAN REJUVENATE YOUR IMMUNE SYSTEM

Fasting for as little as three days can regenerate your immune system in as little as three days - even in elderly people.

Fasting helps the body’s stem cells to begin producing new white blood cells, which help to fight off infection. This discovery could be especially effective for people suffering from damaged immune systems, including chemotherapy patients, who were protected from the toxicimpacts of the treatment during the fasting period.

“Fasting gives the‘OK’ for stem cells to go ahead and begin proliferating and rebuild the entire system,” Prof. ValterLongo, Professor of Gerontology and the Biological Sciences at the  University ofSouthern California, told the UK’s "The Telegraph"
.
He added that the body actually removed parts that were damaged, old or inefficient during the  fasting process, creating “literally, a new immune system.” According to Dr. Longo a person’s system recycles unneeded immune cells, especially damaged ones, in order to create energy while they are fasting.

So all of you who are suffering from auto immune diseases - all that you need to do is to fast for three days - just live on water - and watch your disease die. God Bless.

Tuesday, February 16, 2016

வெற்றிலை பாக்கின் மகத்துவத்தை அறிந்துக்கொள்வோம்!

வெற்றிலை பாக்கின் மகத்துவத்தை அறிந்துக்கொள்வோம்!
.
# வெற்றிலையின் காரத்தன்மை சளித்தொந்தரவுகளுக்கு உகந்தது.
# பாக்கு ஹார்மோன் சுரப்பிகளை ஒழுங்கு செய்வதால் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.
# மேலும் சிறுநீரகத்தை நன்றாக இயக்கி சிறுநீரில் இருக்கும் உப்புத் தன்மையைக் குறைக்கிறது.
Regha Health Care
வெற்றிலை பாக்கின் மகத்துவத்தை அறிந்துக்கொள்வோம்!
.
வயிறார உணவருந்திய பின் வெற்றிலை பாக்கு போட்டால்தான் விருந்தே திருப்திகரமாக முடிந்த உணர்வு பலருக்கும் இருக்கும். தாத்தாக்களும் பாட்டிகளும் பல் போன காலத்தில் கூட வெற்றிலை இடிப்பானில் இடித்தேனும் போட்டுக் கொள்வதைக் கண்டிருப்போம். இப்படியாக வசீகரிக்கும் தன்மையுள்ள வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நல்லதுதானா?
முதலாக இயற்கை வாழ்வியல் மருத்துவர் காசிப்பிச்சையிடம் கேட்டோம்...
‘‘காய் மற்றும் பூ இல்லாமல் வெறும் இலை மட்டுமே இருப்பதால்தான் அது வெற்றிலை என்று அழைக்கப்படுகிறது. திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு ஒருவரை அழைக்கும்போது வெற்றிலை பாக்கு வைத்துதான் அழைப்பார்கள். வெற்றிலை பாக்கு இல்லாமல் தாம்பூலம் இல்லை. வெற்றிலை பாக்கின் மகத்துவம் அறிந்ததனால்தான், அதனை நமது சடங்குகளில் முக்கியப் பொருளாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். வாதம், கபம் என இரு வகைப் பிரச்னைகளையும் தீர்க்கவல்லது.
செரிமானத்துக்கு உதவி புரிகிறது என்பதோடு, நல்ல பசியையும் தூண்டும். வெற்றிலையின் காரத்தன்மை சளித்தொந்தரவுகளுக்கு உகந்தது. பாக்கு ஹார்மோன் சுரப்பிகளை ஒழுங்கு செய்வதால் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். மேலும் சிறுநீரகத்தை நன்றாக இயக்கி சிறுநீரில் இருக்கும் உப்புத் தன்மையைக் குறைக்கிறது. சுண்ணாம்பு சேர்த்துக்கொள்வதால் அதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.
வெற்றிலை தாம்பத்திய வாழ்க்கைக்கு நன்மை புரியும் மூலிகையாகும். நாம் சராசரியான நிறமும் உயரமும் கொண்டவர்கள் என்பதால் வெற்றிலை போடும்போது மிதமான தாம்பத்திய உத்வேகம் கிடைக்கும்.
இந்த ஆற்றலைக் கொடுப்பதால்தான் சிறிய குழந்தைகள் முதலே வெற்றிலைக் காம்பை சாப்பிடக் கொடுக்கிறோம்'' என்று, இதன் நன்மைகள் பற்றி விளக்குகிறார் காசிப்பிச்சை.
.
வெற்றிலை பாக்கு போடுவதால் நன்மைகள் ஏற்பட்டாலும் அது எந்த முறையில் போட வேண்டும்? முறை தவறிப் போடும்போது ஏற்படும் தீங்குகள் குறித்துப் பேசுகிறார் இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் பழனியப்பன்...
‘‘வெற்றிலை - பாக்கு வாயிலிருந்து வரக்கூடிய துர்நாற்றத்தைப் போக்கி, இருமல், சளி தொந்தரவுகளை சீர் செய்து, மலச்சிக்கலை சீராக்கி, வாயிலுள்ள நுண்கிருமிகளை அழிக்கிறது. இது போன்றநன்மைகளை தருவதால் வெற்றிலை பாக்கு போடுவதை வாடிக்கையாக்கிக் கொள்வதில் தவறொன்றுமில்லை. ஆனால், அதை சரியான கலவையில் போட வேண்டும். ஒரு வெற்றிலை அதற்கு ஒரு அரிக்கா பாக்கு அதனுள் லைன் சுண்ணாம்பு கொஞ்சம் தடவிப் போட்டுக்கொள்வதுதான் சரியாக இருக்கும். இந்தக் கலவையில் ஏதோ ஒன்று கூடினாலும் பிரச்னைதான்.
வெற்றிலை அதிகமானால் ஈறையும் பல்லையும் இணைத்திருக்கும் இணைப்பைத் தளர்த்தி விடும். பல்லை அரித்து நிறத்தை மாற்றி விடும். பாக்கு அதிகமாகும்போது பல் சொத்தை ஏற்படும். மயக்கம், நெஞ்சு படபடப்பு, வாய்க்குள் இருக்கும் தசைகளில் அல்சர் வர வாய்ப்பிருக்கிறது. சுண்ணாம்பு அதிகமாகும்போது வாய் மற்றும் வயிற்றில் நோய் வரலாம். ஆக, சரியான கலவையில் சாப்பிடும்போது அதன் முழுப்பயனை அடைய முடியும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பாக்குகளை பயன்படுத்தக்கூடாது.
அரிக்கா பாக்கு என்று சொல்லக்கூடிய ஒரிஜினல் கொட்டைப்பாக்குதான் போட வேண்டும். சுண்ணாம்பில் ரோஸ் நிறம் சேர்க்கப்பட்ட சுண்ணாம்பை தடவக் கூடாது. லைன் சுண்ணாம்புதான் பயன்படுத்த வேண்டும். ஸ்வீட் பீடாவில் இனிப்புக்காக சேர்க்கப்படும் குல்கந்து போன்றவற்றை தனியாக சாப்பிடலாம். வெற்றிலையோடு சேர்த்து சாப்பிடுவது சரியான கலவையாக இருக்காது. சாப்பிட்டு முடித்தபின் வெற்றிலை உடன் மிளகை சேர்த்துப் போடும்போது பருமன் குறையும்.
பிரசவித்த பெண்கள் வெற்றிலையில் சமையல் எண்ணெய் மற்றும் பால் கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். வெற்றிலையில் தேன் சேர்த்து சாப்பிடும்போது இருமல், சளிப் பிரச்னைகள் விரைவில் குணமடையும். காயம்பட்ட இடங்களில் வெற்றிலையை அரைத்தும் பூசலாம்.
தென்னிந்திய உணவுகளில் அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். அதை சமன் செய்வதற்கு வெற்றிலை பாக்கு கலவையில் ஆல்கலின் எனப்படும் காரத்தன்மை இருக்கிறது. அதனால்தான் தென்னிந்திய உணவுக் கலாசாரத்தில் வெற்றிலை பாக்கு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது’’ என்கிறார் ராஜ்குமார் பழனியப்பன்.
.
நன்றி
- மருத்துவர் காசிப்பிச்சை மற்றும் ராஜ்குமார் பழனியப்பன்
- குங்குமம் டாக்டர்