Friday, February 21, 2014

அக்குபஞ்சர் --- சில நம்பிக்கைகளும் , உண்மைகளும் .

நம்பிக்கை - 1 
அகுபஞ்சரில் எல்லா விதமான நோய்களையும் குணபடுத்த முடியும்.


உண்மை   -1 
அகுபஞ்சரில் எல்லா நோய்களையும் குணபடுத்த முடியாது. 100 நபர்கள் சிகிச்சைக்கு வந்தால் அதில் 40 முதல் 50 நபர்களை மட்டுமே குணபடுத்த முடியும். மற்றவர்களுக்கு நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்புகள் இருக்கும் (Endocrine glands) . சிலருக்கு ரெய்கி சக்கர மையங்களில்(Chakkaras) பிரச்னை இருக்கும். இன்னும் சிலருக்கு வர்ம  புள்ளிகளில் பாதிப்பு இருக்கும்.  அதை போன்ற நபர்களுக்கு Acupressure, Reiki, Varma Theraphy, Mudras, Breathing Technique, போன்ற சிகிச்சை முறைகளையும் இணைத்து பயன்படுத்தினால் மட்டுமே குணம் கிடைக்கும் .

நம்பிக்கை - 2. 

அகுபஞ்சரில் பக்க விளைவுகள் கிடையாது .


உண்மை -2  
பக்க விளைவு என்று கூறுவதை விட சக்தி சம நிலை அற்ற தன்மை என்று கூறலாம் . அதிலும் குறிப்பாக பஞ்சபூத புள்ளிகளை (60 command points) பயன்படுதும் போது நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். பஞ்சபூத புள்ளிகளை தவறாகவோ அல்லது தேவை இல்லாமலோ  பயன் படுத்தினால் அது பல்வேறு உறுப்புகளில் ரத்த ஓட்டம் மற்றும் சக்தி ஓட்டத்தை சமநிலை இல்லாமல் செய்து விடும்  . இதனால் ஏற்படும் பாதிப்புகள் உடனடியாக தெரியாது . சில காலம் கழித்து வேறு உறுப்புகளில் வேறு விதமான பிரச்சினைகள் தோன்றும்.

நம்பிக்கை - 3

அகுபஞ்சரில் stimulator போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்தலாம் .


உண்மை -3  

Meridian or channel களில் செல்லும் மின்காந்த சக்தியின் அளவானது மில்லி வோல்ட் என்ற அளவிலேயே இருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும்stimulator போன்ற கருவிகளில் மூன்று முதல் பன்னிரண்டு வோல்ட் வரை பயன்படுத்த படுகிறது. இது இயற்கையான அளவை விட பல நூறு மடங்கு அதிகம். எனவே நாடிகளில் இயக்கம் தாறுமாறாக பாதிக்கப்படும்.

நம்பிக்கை - 4
DU-20 என்ற புள்ளியானது எல்லா நோயாளிகளுக்கும் முதலில் பயன்படுத்த வேண்டிய புள்ளி ஆகும்.

உண்மை  - 4 

DU-20 என்ற புள்ளியானது யோக முறையில் பிரம்மரந்திரம் என்று அழைக்கபடுகிறது.  இந்த இடத்தின் உட் பகுதியில் PINEAL சுரப்பி அமைந்துள்ளது . மேலும் கொண்டை கொல்லி எனப்படும் மிக மிக முக்கியமான வர்மம் இங்கே அமைந்து உள்ளது . இது TRIPPLE  WARMER ன் DIVERGENT POINT ஆகவும் செயல் படுகிறது  இந்த புள்ளி எல்லாருக்கும் பயன்படுத்த வேண்டியது இல்லை.



நம்பிக்கை - 5
இந்த நோயிற்கு இந்த குறிப்பிட்ட புள்ளிகள் என்ற வகையில் அக்குபஞ்சர் புள்ளிகள் பயன்படுத்தபடுகிறது. ( batch points (or) group point (or)Therapeutic points).



உண்மை - 5  


அகுபஞ்சரின் அடிப்படை நோக்கமே பஞ்சபூத சக்திகளை சமநிலை படுத்துவது ஆகும் . நோய்களுக்கு என்று குறிப்பிட்ட புள்ளிகள் கிடையாது 


அவ்வாறு பயன்படுத்தும் போது நோய் முழுமையாக குணமாகாமல் வேறு உறுப்பிற்கு நோயின் தாக்கமானது திசை திருப்ப படுகிறது . இது பின்னால் வேறு ஒரு பிரச்சினையாக வளர்ச்சி பெறுகிறது.  இவ்வாறு பயன்படுத்துவது சரி என்றால், நாடி பரிசோதனை என்ற ஒன்றே தேவை இல்லை என்று ஆகி விடுகிறது .ஆனால் அகுபஞ்சரின் சிறப்பம்சமே நாடி பரிசோதனைதான்.  எனவே நாடி பரிசோதனை செய்து அதற்கேற்ப புள்ளிகளை தேர்வு செய்வதே மிக சிறப்பான பலனை தரும்.





நம்பிக்கை - 6
நாடி பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் .


உண்மை - 6

நாடி பரிசோதனையை காலையில் செய்வது நல்லது. நோயாளி எதுவும் சாப்பிடாமல் இருக்கும்போது நாடி பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது . பகலில் , மாலை வேளைகளில் செய்வது துல்லியமான கணிப்பை தராது. ஒரு சோதனை முயற்சியாக , நீங்கள் ஒரு நபருக்கு நாடி பரிசோதனையை காலையில் சாப்பிடாமல் , சாப்பிட பிறகு , மதியம் , மாலை, இரவு என ஐந்து முறை செய்து பாருங்கள். உங்களுக்கே உண்மை விளங்கும்.

நாடி பரிசோதனை - 1

நோயையும் அதன் மூல காரணத்தையும் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால்தான் நாம் வெற்றி காண முடியும்.  நோய் என்ன என்பதை பல நேரங்களில் நோயாளியே நம்மிடம் சொன்னால் கூட நாம் நமது அறிவை பயன்படுத்தி - நாடி பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும்.

  1. நாடி பரிசோதனையில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறியவேண்டும் .
  2. அந்த உறுப்பின் இயக்கத்தை எந்த உறுப்பின் இயக்கம் பாதிக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் .
  3. அந்த பாதிப்பை சரி செய்யும் புள்ளி எது என்பதை கண்டு பிடிக்க வேண்டும் .
  4. அந்த புள்ளிக்கும் நோயிற்கும் உள்ள தொடர்பு மற்றும் அந்த புள்ளி நோயை எவ்வாறு சரி செய்கிறது என்பதில் தெளிவு வேண்டும்.
  5. அந்த புள்ளி குணமாக்கும் என்பதில் நமக்கு தீவிரமான உறுதி வேண்டும்.

மேற்கண்டவாறு செயல்படும் போது மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் .