Tuesday, May 5, 2015

டாக்டரிடம் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன?

‘மருத்துவர்கள் அத்தனை பேருமே நல்லவர்கள்தான், நாம் அவர்களைத் தேடிச் செல்லாத வரையில்...’ என்றொரு நகைச்சுவைப் பொன்மொழி உண்டு.
நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும், நிஜமும் அப்படித்தான் இருக்கிறது என்பதுதான் வேதனை. பேப்பர் போடுகிறவர் முதல் காய்கறி வியாபாரி வரை அத்தனை பேரையும் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் குடைந்தெடுக்கிற பலருக்கும், மருத்துவர்களிடம் பேச மட்டும் ஏனோ அப்படியோர் மிரட்சி. பெரும்பாலான மருத்துவர்களிடம் சந்தேகங்கள் கேட்கக் கூடாது, எதிர்க்கேள்வி கேட்டாலோ போச்சு... ‘நீ டாக்டரா, நான் டாக்டரா...’ என்கிற ஏளனமான பதிலுக்குத் தலைகுனிய வேண்டும்.
என்னதான் நடக்கிறது? மருத்துவர்களிடம் கேள்வி கேட்பது அத்தனை பெரிய தவறா? தனக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவரிடம் நோயாளி அவசியம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மருத்துவர் பதில் சொல்ல மறுத்தால் என்ன செய்வது?
சாமானிய மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெளிவுப்படுத்துகிறார் மருத்துவரும் சமூக ஆர்வலருமான புகழேந்தி.
‘‘‘நோயாளியின் துணை இல்லாமல் எந்த மருத்துவரும் ஒரு நோயைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது’ என்கிறார் நவீன மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுகிற வில்லியம் ஆஸ்லர். நோயாளி இல்லாமல் மருத்துவம் படிப்பதென்பது, அந்த மருத்துவருக்கு திசை தெரியாத நடுக்கடலில் பயணிப்பதற்குச் சமம். ஆனால், பல மருத்துவர்கள் அதை உணர்வதில்லை. டாக்டரிடம் எப்படிக் கேள்வி கேட்பது, கேட்டால் என்ன பதில் சொல்வாரோ? திட்டினால்? பாதி சிகிச்சையோடு விரட்டினால்... நோயாளிகளுக்கு இப்படி எல்லாவற்றுக்கும் பயம். பிரச்னை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
இந்த இடத்தில் காந்திஜி சொன்ன ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன். ‘என் உடல்நலன் மீது எனக்கு அக்கறை அதிகமா? இன்னொருவருக்கா?’ என்றார். அதன்படி பார்த்தால் மருத்துவரைவிட, நோயாளிக்குத்தானே தன் உடல் மீது அக்கறை அதிகம்? தனக்கிருக்கிற பிரச்னையைப் பற்றி, அதன் அறிகுறிகள் பற்றி சொல்வது மட்டும்தான் நோயாளியின் வேலை. அதன் பின்னணியில் உள்ள டெக்னிகல் விஷயங்களைக் கண்டுபிடித்து, நோயாளிக்குச் சொல்வது மட்டுமே மருத்துவரின் கடமை. அதன் தொடர்ச்சியாகப் பரிந்துரைக்கப்படுகிற சிகிச்சையைப் பற்றி முடிவெடுப்பது முழுக்க முழுக்க நோயாளியின் உரிமை மட்டுமே. சட்டமும் அதையே சொல்கிறது. ஆனால், யதார்த்தம் அப்படியிருப்பதில்லை.
என் அம்மாவை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒரு படிவத்தில் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். எதிர்பாராத விதமாக ஏதேனும் பிரச்னைகள் வந்தால், மருத்துவரோ, மருத்துவமனை நிர்வாகமோ பொறுப்பில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மயக்க மருந்து கொடுக்கும் போது 2 விதங்களில் பிரச்னை வரலாம். மருத்துவர் சரியான அளவு கொடுத்து, நோயாளியின் உடல் அதற்கு வேறு மாதிரி ரியாக்ட் செய்தால், அது மருத்துவப் புறக்கணிப்பில் வராது. ஆனால், மயக்க மருந்தின் அளவைக் கூட்டிக் கொடுத்து, அதனால் பிரச்னை வந்தால், அது மருத்துவப் புறக்கணிப்பின்றி வேறென்ன? நீங்கள் சரியான அளவு மயக்க மருந்துதான் கொடுக்கிறீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? எனவே, அந்த வரிகளை படிவத்தில் இருந்து நீக்குங்கள் என்று வாதாடினேன். 
கையெழுத்து போடாவிட்டால் அறுவைசிகிச்சை செய்ய முடியாது என்றார்கள். பெரும்பாலான கண் மருத்துவமனைகளில் இப்படித் தான் நடக்கிறது. சமீபத்தில் மறுபடி என் அம்மாவை வேறொரு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றேன். சிறுநீரகச் செயல்பாட்டைக் கண்டுபிடிக்க சில டெஸ்ட்டுகள் எடுக்கச் சொன்னார்கள். ரத்தம், யூரியா மற்றும் சீரம் கிரியாட்டினின் என எல்லாம் எடுக்கச் சொன்னார்கள். சிறுநீரகச் செயல்பாட்டை யூரியா டெஸ்ட்டைவிட சீரம் கிரியாட்டினின்தான் துல்லியமாகச் சொல்லும். அப்படியிருக்கும் போது எதற்கு அனாவசியமாக இரண்டு டெஸ்ட்டுகள் எனக் கேள்வி எழுப்பினேன். 
பதில் இல்லை. புகார் எழுதிப் போட்டிருக்கிறேன். அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. விஷயம் தெரிந்த ஒரு மருத்துவரான எனக்கே இந்த நிலைதான். 
போலியோ சொட்டு மருந்து கொடுத்தால் போலியோ வராது என விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால்,போலியோ சொட்டு மருந்து கொடுத்த பிறகும் போலியோ வரும். அதற்குப் பெயர் ‘வேக்சின் டிரைவ்டு போலியோ’. (vaccine derived polio) அதைப் பற்றி யாரும் சொல்வதில்லை. எல்லாவிதமான தடுப்பூசி மருந்துகளிலும் thiomersal என்கிற ஒரு ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கிறார்கள். அந்த ப்ரிசர்வேட்டிவின் விளைவால் ஆட்டிசம் (AUTISM) வருவதாக அமெரிக்காவில் அதைத் தடை செய்து விட்டார்கள். 
இந்தியாவிலோ அப்படி எந்தத் தடையும் இதுவரை இல்லை. ஒரு தடுப்பூசியைப் போட்ட பிறகு போலியோ வராது என்றோ, ஆணுறை உபயோகித்தால் எய்ட்ஸ் வராது என்றோ அமெரிக்காவில் யாரும் விளம்பரப்படுத்த முடியாது. ஆனால், நம்மூரில் கல்வியின் தரமும் சமூக நிலையும் அரசியல் ஆதிக்கமும் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. ஒரு மருந்தின் சாதக, பாதகங்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அதைத் தெரிந்து கொண்டு அதை எடுப்பதா, விடுப்பதா என முடிவு செய்ய வேண்டியது அவரவர்தான்.
என்னுடைய மருத்துவ நண்பர் ஒருவரிடம்   ஒரு குழந்தையைத் தூக்கி   வந்து காட்டினார்கள். அந்தக் குழந்தைக்கு உடல் முழுக்க தடிப்பு. உடனே என் நண்பரான அந்த மருத்துவர், நான்கு மாத்திரைகள், ஒரு ஊசி, ஒரு ஆயின்மென்ட், ஒரு சோப் எல்லாவற்றையும் பரிந்துரைத்தார். அடுத்த நாளே அந்தக் குழந்தைக்கு எல்லாம் சரியாகிவிட்டது. அந்தக் குழந்தையின் அலர்ஜி பிரச்னைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் போதும் என்பது எனக்குத் தெரியும். மாத்திரையால்தான் குணமானது என்பது தெரியாமல், அவர் எழுதிக் கொடுத்த ஆயின்மென்ட்டும், சோப்பும்தான் காரணம் என அவர்கள் நினைப்பார்களே... அதுதான் வணிக தந்திரம்.

இன்னொரு மருத்துவ நண்பர்... அவரிடம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர், ஆலோசனைக்கு வருகிறார். உணவுக் குழாயில் எரிச்சல் என்பது அவரது புகார். இந்த அறுவை செய்தவர்களுக்கு பொதுவாக ஸ்டீராய்டு மருந்துகள் கொடுப்பார்கள். அதன் விளைவுதான் அவருக்கு உணவுக்குழாயில் உண்டான எரிச்சல். அதற்கு சாதாரண மருந்து போதும். ஆனாலும், என் நண்பர் இசிஜி செய்யச் சொல்லி எழுதிக் கொடுத்தார். அதைப் பற்றி நான் கேட்ட போது, ‘அட நீ வேறப்பா... நான் பிரைவேட் ஆஸ்பத்திரியில வேலை பார்க்கறேன். அவங்க பெரிய காசு போட்டு இசிஜி மெஷின் வாங்கிப் போட்டிருக்காங்க. நான் எழுதிக் கொடுக்கலைனா, என்னை வேலையை விட்டுத் தூக்கிடுவாங்க’ என்ற போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மக்கள் எவ்வளவு பாவம் பாருங்கள்... 
தனக்குப் பரிந்துரைக்கப்படுகிற 
மருந்துகளில்,
சோதனைகளில் 
  • எதெல்லாம் தேவையில்லாதது, 
  • எது அவசியமானது, 
  • விலை குறைவான மருந்துகள் இருக்கின்றனவா, 
  • மருந்துகளின் சாதக, பாதகங்கள் என்னென்ன 
என எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது நோயாளிகளின் உரிமைகள். சரியான பதில் கிடைக்காவிட்டால் தைரியமாகப் போராடுங்கள். 
வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. ஆனால், நம்மூரில் எல்லாக் காய்ச்சலுக்கும் ஆன்டிபயாடிக்தான். தேவையில்லாத மருந்துகளைப் பரிந்துரைக்கிற கொடுமை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது.
அதே மாதிரி சாதாரண, விலை மலிவான மருந்துகளிலேயே சரியாகக் கூடிய பிரச்னைக்கு, எக்கச்சக்க விலையுள்ள மருந்துகளைப் பரிந்துரைக்கிற அக்கிரமமும் இங்கேதான் நடக்கிறது. 
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்றும், அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த கதையும் படித்திருக்கிறோம். அவை எதுவுமே அபத்தமில்லை. நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி இருக்கிறது. அது நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுத்து, ஆயுளைக் கூட்டும் என்பதும் அறிவியல்.  
அரிசி உணவுகளைத் தவிர்த்து, சிறுதானிய உணவுகளைச் சேர்த்துக் கொண்டால் 40 சதவிகித நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம் என்பது உண்மை. 
ஆனால், எந்த மருத்துவராவது இதையெல்லாம் நோயாளிகளுக்குச் சொல்கிறாரா? மருத்துவரின் வேலை, நோயைக் குணப்படுத்துவதா?  தடுப்பதா? 
வியாதி வந்தால் மருத்துவமனைக்குப் போ, மருத்துவரைப் பார், மருந்து சாப்பிடு... இதுதான் எழுதப்படாத விதியாக இருக்கிறது. 
  • காற்றோட்டமான இடமும் 
  • சுத்தமான, சத்தான சாப்பாடும், 
  • செருப்புகள் தவிர்க்காத கால்களும் 
நோய்களில் இருந்து காப்பாற்றும் என எந்த மருத்துவர் பிரச்சாரம் செய்கிறார்? 
நடக்கும் பிரசவங்களில் 50  சதவிகிதத்துக்கும் அதிகமானவை சிசேரியன். அவசரமான தருணங்களில், தாயையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய கட்டத்தில் மட்டும்தான் சிசேரியன் அவசியம். ஆனால், ஏதேதோ காரணங் களைச் சொல்லி, பல மருத்துவர்களும் சிசேரியனை வலியுறுத்துகிறார்கள். அதற்கு சம்மதிப்பதற்கு முன், சிசேரியன் ஏன் தேவை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டும்படி மருத்துவரிடம் கேட்க வேண்டும். எத்தனை பேர் கேட்கிறீர்கள்? இனியாவது கேளுங்கள்.
மருத்துவம் படிக்கிற பலரும், பெரிய பணத்தை செலவழித்துப் படிப்பதால், அதை எத்தனை சீக்கிரம் திருப்பி எடுப்பது என்பதில்தான் கவனமாக இருக்கிறார்கள். 
  • மருத்துவருக்கும் நோயாளிக்குமான இடைவெளி நிரப்பப்பட வேண்டும். 
  • ஸ்டாண்டர்டு மெடிக்கல் ட்ரீட்மென்ட் என்பது இங்கே சட்டமாக்கப்பட வேண்டும். 
  • ஒரு மருந்து பாதுகாப்பானதுதானா, இல்லையா என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிக்கிற அநியாயம் நிறுத்தப்பட வேண்டும். 
  • மருத்துவத் துறையில் வணிக நலன் தூக்கி எறியப்பட்டு, மக்கள் நலன் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். 
  • கேள்வி கேட்கும் அறிவை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். 
  • எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவர்கள் அனைவரும் மனசாட்சிக்குப் பயந்து நடக்க வேண்டும். 
உயிரைக் காப்பாற்றும் உன்னதப் பணியில் இருப்பதை மறக்காமல், மருத்துவத்தை நிஜமான சேவையாக நினைத்துச் செய்ய வேண்டும்.  சட்டமும் அதைத்தான் சொல்கிறது...’’ 

Sunday, May 3, 2015

HOW TO GET SLEEP - SURESHOT TECHNIQUE

The 4-7-8 (or Relaxing Breath) Exercise
This exercise is utterly simple, takes almost no time, requires no equipment and can be done anywhere. Although you can do the exercise in any position, sit with your back straight while learning the exercise. Place the tip of your tongue against the ridge of tissue just behind your upper front teeth, and keep it there through the entire exercise. You will be exhaling through your mouth around your tongue; try pursing your lips slightly if this seems awkward.
  • Exhale completely through your mouth, making a whoosh sound.
  • Close your mouth and inhale quietly through your nose to a mental count of four.
  • Hold your breath for a count of seven.
  • Exhale completely through your mouth, making a whoosh sound to a count of eight.
  • This is one breath. Now inhale again and repeat the cycle three more times for a total of four breaths.
Note that you always inhale quietly through your nose and exhale audibly through your mouth. The tip of your tongue stays in position the whole time. Exhalation takes twice as long as inhalation. The absolute time you spend on each phase is not important; the ratio of 4:7:8 is important. If you have trouble holding your breath, speed the exercise up but keep to the ratio of 4:7:8 for the three phases. With practice you can slow it all down and get used to inhaling and exhaling more and more deeply.
This exercise is a natural tranquilliser for the nervous system. Unlike tranquillizing drugs, which are often effective when you first take them but then lose their power over time, this exercise is subtle when you first try it but gains in power with repetition and practice. Do it at least twice a day. You cannot do it too frequently. Do not do more than four breaths at one time for the first month of practice. Later, if you wish, you can extend it to eight breaths. If you feel a little light-headed when you first breathe this way, do not be concerned; it will pass.
Once you develop this technique by practising it every day, it will be a very useful tool that you will always have with you. Use it whenever anything upsetting happens - before you react. Use it whenever you are aware of internal tension. Use it to help you fall asleep. This exercise cannot be recommended too highly. Everyone can benefit from it.

if you want to sleep - then do this exercise while lying down in your bed.

NO MORE DISEASE - JUST 4 TIPS - AND ALL HEALTH IS YOURS!!!

All of us want to be healthy - and all of us want to find a simple way to remain healthy.  If you want to live long - and live without ANY disease affecting you - including common cold... just follow 4 tips given below :

1. Drink water 40 minutes BEFORE eating and one hour AFTER eating a meal.

2. Whenever you drink water - sip from a glass and drink in small gulps.

3. NEVER EVER drink very cold water or drink (omg... what about my cola - or my favourite fizz drink?!!!!)

4. As soon as you get up from bed - drink atleast 2 glasses of water and then go to the toilet and empty your bowel.

The above four tips are VERY EASY to follow - and the resulting health that you will enjoy will be stupendous. If you follow these tips - no more gas trouble - no more acidity - no more blood pressure - no more diabetes - no more cold - no more cough - no more joint pains - in short - no more diseases at all. Want to be healthy ? You know how to.

Wednesday, April 29, 2015

சர்க்கரை நோய் - ஒரே மாதத்தில் விரட்ட வழி

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்


வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ


தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சவும். 


பின்பு வடிகட்டி மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரம் முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். 


சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட செய்து உறுதி செய்யுங்களேன்.

கட-உள்

எல்லையற்ற பரம்பொருளை
ஈடு இணை அற்றவனை
அனைத்தையும் கடந்து நிற்பவனை
நவ கோள்களுக்குள்ளே
பூமி பந்துக்குள்ளே
சிறு நாட்டுக்குள்ளே
மத கோட்டுக்குள்ளே
ஏன் சிறை வைக்க நினைக்கிறீர்கள்?

குளிப்பதும் உடலை கழுவுவதும் ஒன்றுதானா?



உண்மையில் நீங்கள் தினமும் குளிக்கிறீர்களா (அல்லது உடலை கழுவுகிறீர்களா)?

யாரை பார்த்து என்ன கேள்வி கேட்டீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் 2 முறை குளிக்கிறேன், நான் costly யான soap தான் போட்டு தினமும் இருவேளை குளிக்கிறேன், ...... இப்படி பல பதில்கள் உங்களிடம் இருந்து வரலாம். அதற்கு முன் குளியல் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
குளித்தல் என்பது குளிர்வித்தல் என்கிற சொல்லின் சுருக்கமே. குளிர்வித்தல் என்பது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் நடைபெற வேண்டும். இதனையே ஔவையார் “சனி நீராடு” என்றார்.

உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவுவது, வெளியே சென்று வந்தால் முகம் கை, கால்களை கழுவுவது போன்றதே தலைக்கு தண்ணீர் ஊற்றாமல் கழுத்திற்குக் கீழே மட்டும் தண்ணீர் ஊற்றுவது என்பதும். கழுத்திற்கு கீழ் மட்டும் தண்ணீர் ஊற்றுவது என்பது குளித்தல் ஆகாது, உடலை கழுவுதலே ஆகும். தலைக்கு தண்ணீர் ஊற்றாமல் உடலின் பிற பகுதிகளுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றும்போது உடலில் உள்ள ஒட்டுமொத்த சூடும் தலைக்கு ஏறி கேடு விளைவிக்கும். (அதில் ஒன்று தான் தலையில் பொடுகு வைப்பதும், மற்றும் பிற உடல் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும்).

தினமும் குளித்திராதவர்களுக்கு உறைந்த சளி, சுவாசத்தில் சிரமம், உடல் அசதி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட காலமாக குளிர்வித்தலை புறக்கணித்ததன் விளைவாக புதிதாகக் குளிக்கும்போது கழிவு வெளியேற்றம் நடைபெறும்; இதனால் ஆரம்பத்தில் உடலில் சிரமம் ஏற்படலாம். தொடர்ந்து குளித்தால் சுகத்தைப் பெறலாம். மழை பெய்கின்ற போதெல்லாம் மழைநீரில் உடல் நடுங்கும் அளவிற்கு நனைவது (குளிப்பது) உடலை வலுவாக்கும்.
“கூழானாலும் குளித்து குடி” என்பது சான்றோரின் வாக்கு. குடிப்பது கூழே ஆனாலும் குளித்தப் பின்னரே குடிக்க வேண்டும். இவ்வாக்கு மூலம் உணவருந்தும் நாட்கள் எல்லாம் உணவருந்துவதற்கு முன்பு குளித்தல் அவசியம் என்பது புலனாகிறது. (குறிப்பு: விரதம் இருக்கும் நாட்கள் வேண்டுமானால் நீங்கள் குளிக்காமல் இருந்து கொள்ளுங்கள்). அப்படியானால் குளித்தல் என்பது தினசரி நடக்கவேண்டிய ஒன்று. தினசரி உடல் முழுக்க குளிப்பவர்கள் தங்களது உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சியை பெற்று சுகத்தை பெறமுடியும்.

குளிப்பதற்கு எவ்வாறு சாதாரண நீர் உகந்ததோ அதுபோன்றே பருகுவதற்கும் சாதாரண நீரே ஏற்றது. வெந்நீர், ரசாயனங்கள் கலக்கப்பட்ட மினரல் வாட்டர் போன்றவை உடலுக்கு நலம் தருபவை அல்ல. குடிப்பதற்கும் குளிப்பதற்கும் சாதாரண நீர் அல்லது மண்பானை நீர் பயன்படுத்தலாம். மண்பானை நீரில் உடலுக்கு தேவையான உயிராற்றல் நிலைபெற்று இருக்கும்.

ஆனால் இன்றோ தலையில் தண்ணீர் படாமல் உடலை மட்டும் நனைப்பதை "சாதாரன குளியல்" என்றும் தலை நனையுமாறு குளிப்பதை "தலைக்கு குளிப்பது" என்றும் பெயர் மாற்றி கூறுகிறார்கள். நம்மவர்கள் "தலைக்கு குளிப்பது" என்று கூறுவது தான் உண்மையான "சாதாரன குளியல்".

"எண்ணை குளியல்' என்று ஒரு வகை குளியல் உள்ளது. அதாவது உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணை தேய்த்து குறைந்தது அரை மணி நேரமாவது கழித்து குளிப்பது.

குளியலுக்கு எதை பயன்படுத்தலாம்?
சோப்பு, ஷாம்பூ – தவிர்க்க வேண்டியவை:
சோப்பு, ஷாம்பூ முதலிய ரசாயன விஷங்களை உடலில் மேல் பயன்படுத்தும்போது அவை கழிவுகள் வெளியேறுவதற்காக தோலின் மேற்பரப்பில் உள்ள மெல்லிய துளைகளை அடைத்துவிடும். அதனால் தோலின் வழியாக உடல் கழிவுகள் வெளியேறாமல் உடல் நலம் பாதிக்கும். நம் உடல் தோலின் மூலமாக கிரகிக்க கூடிய பிரபஞ்ச சக்தியை சரியாக கிரகிக்க முடியாமலும் பாதிப்புக்கு உள்ளாகும். சோப்பு, ஷாம்பூ மட்டும் அல்ல, உடலின் மேல் பயன்படுத்த கூடிய facepowder, facecream, body spray, cent, sun screen lotions, body lotion அனைத்தும் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சியக்காய், அரப்பு, பச்சைபயறு, கடலைமாவு, அரிசிமாவு, கேழ்வரகு மாவு, என எதாவது ஒன்றையோ அல்லது சிலவற்றை சேர்த்தோ பயன்படுத்தலாம்.
(சோப்பு போல நுரைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இவற்றில் ஒன்றுடன் ஒரு கிலோவிற்கு 150 gram விதம் வெந்தயத்தை சேர்த்து பயன்படுத்தலாம்)

இந்த கட்டுரை Acu Healer AjayRaja எழுதிய "நான் நலமாக இருகிறேனா?" என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவருக்கும் இந்த புத்தகத்தை வெளியிட்ட "புத்துயிர் பதிபகதிற்கும்" எனது மனமார்ந்த நன்றி

(29.04.15) – மோகினி ஏகாதசி - for those who believe

 (29.04.15) – மோகினி ஏகாதசி.

இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவரின் மனதில் உள்ள ஆழ்ந்த வேதனைகளும், துன்பங்களும், தடைகளும் நீங்கி வாழ்வில்
சுகம் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.

ஹே யுதிஷ்டிரா !! ஒருமுறை மகரிஷி வசிஷ்டர் பிரபு ஸ்ரீராமனுக்கு கூறிய கதையினை இப்போது உனக்கு கூறுகிறேன். கவனமாகக் கேள் என்று கூறத் தொடங்கினார்.

ஒருசமயம் பிரபு ஸ்ரீராமர் மகரிஷி வசிஷ்டரிடம், குருதேவா !! ஜனகநந்தினி சீதையின் பிரிவினால் சொல்லவொணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து விடுபடவும், அனைத்து பாவங்களையும் அழித்து மகிழ்ச்சியை அளிக்கவல்ல விரதம் ஏதேனும் இருந்தால் கூறுங்கள் என வேண்டினார்.

அதனைக் கேட்ட மகரிஷி வசிஷ்டர், ராமா !! ஆழ்ந்த அறிவாற்றலைக் கொண்டவனே !! ஜகத்தின் நன்மை கருதி நீ கேட்ட இந்த கேள்விக்கு விடையளிக்கிறேன். மோகினி ஏகாதசி விரத மகாத்மியத்தை உனக்கு கூறுகிறேன், கவனமாகக் கேள் என்று கூறத் தொடங்கினார்.

மோகினி ஏகாதசி விரத மகாத்மியத்தால் ஒரு மனிதனுடைய பாவங்களும், துக்கங்களும் அழிக்கப் படுகின்றன. மேலும் இந்த விரதத்தின் பிரபாவத்தினால் மனிதர்கள் மோகம் என்னும் மாயையிலிருந்து விடுதலை பெறுவர். துக்கம் மற்றும் வாழ்வில் மிகவும் துயரத்தில் அவதிப்படுபவர்கள் நிச்சயம் இந்த விரதத்தினை அனுஷ்டிக்க வேண்டும். அதன் மகாத்மிய கதையை கவனமாகக் கேள் !!

முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதிக்கரையில் பத்ராவதி என்னும் வளமான நகரை த்யுதிமான் என்னும் அரசன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். அங்கே தனபாலன் என்கிற வியாபாரி ஒருவன் பரம விஷ்ணுபக்தனாக, பக்தர்களுக்கு சேவை சாதித்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு சுமனா, சத்புத்தி, மேதாவி, சுக்ரீதி, திருஷ்டபுத்தி என 5 புதல்வர்கள் இருந்தனர்.

அவற்றுள் திருஷ்டபுத்தி பாவியாகவும், துஷ்டனாகவும் விளங்கினான்.தெய்வம், பித்ருக்கள் என்று எவரையும் நம்பாமல், மதிக்காமல் தந்தை ஈட்டும் செல்வத்தினை மது, மாது, சூது என பல தீய வழிகளில் செலவிட்டு வந்தான்.
ஒருமுறை அவன் சாலையில் அனைவரும் அறியும் வகையில் ஒரு விலைமாதுவுடன் தோளில் சாய்ந்து கட்டிக்கொண்டு போவதைக் கண்ட தனபாலன், மற்றும் அவனது சகோதரர்கள், உறவினர்கள் அனைவரும் அவனை வெறுத்து ஒதுக்கத் துவங்கினர். தனபாலன் அவனை வீட்டை விட்டே துரத்தியடித்தான்.

வீட்டை விட்டு வெளியேறிய திருஷ்டபுத்தி, அவனிடம் இருந்த விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை விற்று வாழ்ந்து வந்தான். அவனது பணம் தீர்ந்தவுடன் அவனுடன் இருந்த துஷ்ட நண்பர்களும், வேசிகளும் அவனை விட்டு விலகினர்.

பசியில் வாடிய அவன், வேறு வழியின்றி, திருடுவது என்று முடிவுக்கு வந்தவனாக இரவு நேரங்களில் திருடி பிழைப்பு நடத்தி வந்தான். ஒருமுறை நகர காவலர்கள் அவனை பிடித்து விட்டனர். ஆனால் அவன் தந்தையின் நன்னடத்தை கருதி மன்னித்து விட்டு விட்டனர். ஆனால் இரண்டாவது முறை பிடிபட்ட போது அவனை அரசன் முன்னிலையில் நிறுத்தி அவனை நகரை விட்டே ஒதுக்கி வைத்து விட்டனர்.

மிகுந்த மனவருத்தம் அடைந்து, காட்டிலுள்ள விலங்குகளைக் கொன்று தின்று வாழ்ந்து வந்தான். ஒருநாள் எந்த விலங்குகளும் கிடைக்காமல் போகவே, பசியும், தாகமும் உடலை வருத்த அங்குமிங்கும் அலைந்து, திரிந்து இறுதியாக கௌண்டின்ய முனிவரின் ஆஸ்ரமத்தினை அடைந்தான்.

அப்போது தான் அவர் கங்கை நதியில் குளித்து முடித்து விட்டு வந்து கொண்டிருந்தார். அவரது ஈர உடையிலிருந்த நீர் துளிகள் அவன் மீது பட்ட மாத்திரத்தில் பாவியான அவனுக்கு நற்சிந்தனைகள் உருவாகியது. அவன் முனிவரின் அருகில் சென்று அவரை வணங்கி, மன்னிக்க முடியாத அளவிற்கு பாவம் செய்த எனக்கு அதிலிருந்து முக்தி பெற ஏதேனும் எளிய வழி இருந்தால் தயை கூர்ந்து கூறுங்கள் என்றான்.

அதைக் கேட்ட முனிவர், நான் கூறுவதை கவனமாகக் கேள் !! உனது நல்ல நேரம், இன்னும் சிறிது காலத்தில் மோகினி ஏகாதசி நன்னாள் வரவிருக்கிறது. அதனை கடைபிடிப்பதன் மூலம் உனது பாவ வினைகள் அனைத்தும் நீங்கி புதிய வாழ்வினைப் பெறுவாய் என்று அதனை கடைபிடிக்கும் வழிமுறைகளையும் அவனுக்கு கூறியருளினார்.

அதனை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த திருஷ்டபுத்தி, அவர் கூறியது போலவே, மோகினி ஏகாதசி விரதத்தினை விதிப்பூர்வமாக கடைபிடித்து நல்வாழ்வை பெற்றான். மேலும், இந்த விரதத்தின் பிரபாவத்தால் இறுதியில் கருடவாகனத்தில் விஷ்ணுலோகத்தை அடையும் பேறு பெற்றான் என மகரிஷி வசிஷ்டர் பிரபு ஸ்ரீராமரிடம் கூறி முடித்தார் என பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

இவ்விரதத்தினால் மனிதர்கள் மோகம் என்னும் மாயத்திரை நீங்கி, முக்தியைப் பெறுவதோடு, அவர் வாழ்வில் துரதிர்ஷ்டங்கள், துயரங்கள், தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுவர்.

மேலும், எவரொருவர் இந்த நன்னாளில் இந்த விரதத்தின் மகாத்மியத்தை உணர்த்தும் இந்தக் கதையை படிக்கிறாரோ / சொல்கிறாரோ / கேட்கிறாரோ அவர்கள் ஓராயிரம் கோ தானம் செய்த புண்ணியத்தினை அடைவர் என்று பகவான் யுதிஷ்டிரரிடம் கூறி முடித்தார்.

***ஓம் நமோ பகவதே வாசுதேவாய***

Tuesday, April 28, 2015

Brain Death - update

I have written about brain death in various posts

மூளை இறக்குமா? அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா?

BRAIN DEATH - BULL SHIT!!!

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள்...!

Now here comes the proof to vindicate our stand... 




For those of you who can not read tamil - a 30 year old lorry owner met with an accident - he was treated in a private hospital and the doctors - after giving intensive treatment (read it as HEAVY BILLING) - declared Bharath as brain dead.  

The "dead" Bharath was taken to Guntur Government Hospital - the doctors there also gave intensive treatment - and finally declared him as brain dead.

At this point - Bharath's relatives came forwardto donate his organs.  (actually - the doctors will do counselling and show them the path to donation - bcos donation of organs is highly profitable) 

The medically declared "dead" Bharath was taken to a private hospital for harvesting the organs. The doctors there - while scanning the body - found movement in his body - and realized that the poor guy was alive!!!

If a doctor announces "brain death" - law should disbar him from practising medicine. If a doctor harvests organs from some one who is alive - but declared "brain dead" - law should come down heavily on that doctor - and declare him as a murderer.

IF BRAIN IS REALLY DEAD - HOW ARE THE OTHER ORGANS WORKING? 

IF BRAIN IS REALLY DEAD - THEN IT IS USELESS - THEREFORE IT CAN BE REMOVED.  WHY DO OTHER ORGANS STOP WORKING WHEN YOU REMOVE THIS USELESS "DEAD" BRAIN? THEREFORE DEATH HAPPENS NOT BECAUSE THE BRAIN DIED - BUT ONLY BECAUSE YOU CUT OFF THE ORGANS. THEREFORE - IT IS THE DOCTOR WHO KILLS!!!

7 DAYS - LOSE 7 KILOS

நாள் 1
ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு அந்நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் வாழைப்பழத்தை தவிர வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம்.

only fruits on first day. Avoid bananas. Drink lots of water.
நாள் 2
இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். ஏன் உங்களுக்குப் பிடித்த உருளைக்கிழங்கைக் கூட பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் குடித்து வாருங்கள்.

Only vegetables on 2nd day. Either boiled or raw as salad. Minimum of 8 glasses of water during the day.
நாள் 3
மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், மதியம் ஒரு பௌல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

Eat fruits and vegetables. One bowl of fruit in the morning - one bowl of vegetables in the afternoon - and either fruits or vegetables in the night. Avoid bananas and potatoes. As usual - lots of water.
நாள் 4
நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அது ஸ்மூத்தி, மில்க் ஷேக் என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக ஸ்கிம் செய்யப்பட்ட பாலை தான் சாப்பிட வேண்டும்
நாள் 5
இந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். அதுவும் காலை முதல் மாலை வரை தக்காளியையும், இரவில் சாதத்தையும் சாப்பிடுவது நல்லது. ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சாதாரணமாக 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Only tomatoes from morning to evening - either boiled or raw. One cup of rice in the night. Lots of water during the day.
நாள் 6
ஆறாம் நாளில் மதிய வேளையில் ஒரு கப் சாதத்தையும், மற்ற நேரங்களில் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

Vegetables for breakfast and dinner - one cup of rice in the afternoon.
நாள் 7
இந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்

Seventh day - one cup of rice - lots of vegetables - lots of fruit juice.

If you follow this diet - not only your weight will reduce - but you will start feeling healthy too. Sugar patients - even though this diet wont harm you - if you are already suffering from weight loss - then please do not follow this diet regimen.

Lose weight healthily :-)

Sunday, April 26, 2015

30 நாட்கள் 30 சாதங்கள்

குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் முன்னர் - மதிய உணவு என்ன கொடுத்து அனுப்பலாம் என்று குழம்பினால் - கீழ் வரும் பதிவு உங்களுக்கு உதவலாம். இந்த தகவல் உரிமையாளர் சமையல் திலகம் ரேவதி சண்முகம் !!!

கோவைக்காய் சாதம்

தேவை:
உதிராக வடித்த சாதம் கப்
பெரிய வெங்காயம் 1, 
கோவைக் காய் 100 கிராம்,
 தேங்காய்த் துருவல்மிளகாய்த் தூள் தலா டீஸ்பூன்
எலுமிச்சை சாறு டீஸ்பூன்
கடுகுஉளுந்து தலா அரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு டீஸ்பூன்
எண்ணெய் டேபிள் ஸ்பூன்,
 உப்பு தேவைக்கு
கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை:
வெங்காயம்கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள். 
வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகுஉளுந்துகடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்துவெங்காயம்தேங்காயை வதக்குங்கள். பச்சை வாடை போனதும்கோவைக் காய்மிளகாய்த் தூள்உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கிகறிவேப்பிலைஎலுமிச்சம் சாறு சேர்த்து இறக்குங்கள்.
இந்தக் கலவையோடு சாதத்தைக் கலந்து பரிமாறுங்கள்.

கறிவேப்பிலை சாதம்

தேவை: 
உதிராக வடித்த சாதம் கப்கடுகுஉளுந்து தலா அரை டீஸ்பூன்கடலைப் பருப்பு டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
பொடிக்க: மிளகுகசகசா தலா டீஸ்பூன்சீரகம் டீஸ்பூன்முந்திரி 4, கறிவேப்பிலை கப்தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்மிளகாய் வற்றல் 6.

செய்முறை: 
கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள். பிறகு மிளகுசீரகம்கசகசாமிளகாய் வற்றல்முந்திரிதேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.
எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகுஉளுந்துகடலைப் பருப்பு ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில்பொடித்த பொடிஉப்புதாளிதக் கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்குங்கள்.

மும்பை சாதம்

தேவை: பச்சரிசி அரை கப்தோலுடன் உடைத்த பாசிப் பருப்பு கப்மஞ்சள் தூள் சிட்டிகைபச்சை மிளகாய் 2, நெய் டேபிள் ஸ்பூன்கடுகுசீரகம் தலா அரை டீஸ்பூன்பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகைகறிவேப்பிலை சிறிதளவுஉப்பு தேவைக்கு.
செய்முறை: குக்கரில் அரிசிபருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்மஞ்சள் தூள்உப்பு மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.
வாணலியில்மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகுசீரகம்கறிவேப்பிலைபெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.
இந்தக் கலவையைசாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.

கதம்ப சாதம்

தேவை: பச்சரிசிதுவரம் பருப்பு தலா கப்காய்கறி கலவை (கேரட்பீன்ஸ்கோஸ்பீட்ரூட்…) 2 கப்சின்ன வெங்காயம் 10, தக்காளி 5, சாம்பார் தூள் டேபிள் ஸ்பூன்புளி கரைசல் அரை கப்பெருங்காயம்மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன்கடுகுஉளுந்து தலா டீஸ்பூன்எண்ணெய்நெய் தலா டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: காய்களை விரல் நீளத் துண்டுகளாகவும்வெங்காயம்தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். அரிசிபருப்புடன் ஆறு கப் தண்ணீர்காய்கறிகள்மஞ்சள் தூள்உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும்மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
வாணலியில் எண்ணெய்நெய்யை சூடாக்கி கடுகுஉளுந்து தாளித்துவெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளிசாம்பார்தூளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கிபுளி கரைசல்மஞ்சள் தூள்பெருங்காயத்தூள்உப்புஒரு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிபருப்பு சாதக் கலவையோடு சேர்த்துக் கலக்குங்கள்.

எள் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்கடுகு டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுநெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
பொடிக்க: எள் டேபிள் ஸ்பூன்உளுந்து டேபிள் ஸ்பூன்மிளகாய் வற்றல் 8, தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்எண்ணெய் டீஸ்பூன்பெருங்காயம் சிறு துண்டு.
செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் போட்டுபொரியும்படி வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து பிறகு மிளகாய்உளுந்துதேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்தெடுங்கள். எள் உட்படவறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடித்து வையுங்கள்.
நெய்யில் கடுகுகறிவேப்பிலையை தாளியுங்கள்.
சாதத்தில் எள் பொடிஉப்பு ஆகியவற்றைத் தூவிகடுகு தாளிதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.

மாங்காய் இஞ்சி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்தோல் நீக்கி துருவிய மாங்காய் இஞ்சி துருவல் அரை கப்மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் 4, எலுமிச்சை சாறுஎண்ணெய் தலா டேபிள் ஸ்பூன்கடுகுஉளுந்து தலா அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை சிறிதளவுஉப்பு தேவைக்கு.
பொடிக்க: உளுந்து டேபிள் ஸ்பூன்கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூன்தனியா டீஸ்பூன்தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்மிளகாய் 3, எண்ணெய் டீஸ்பூன்.
செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில்மாங்காய்இஞ்சி துருவல்பச்சை மிளகாய்மஞ்சள் தூள்சிறிதளவு உப்பு ஆகியவற்றை வதக்கிகரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிவக்க வறுத்து பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகுஉளுந்துகறிவேப்பிலையை தாளியுங்கள்.
சாதத்தில்அரைத்த விழுதுபொடித்து வைத்துள்ள பொடிஉப்புதாளிதக் கலவைஎலுமிச்சம் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.

ஸ்பெஷல் எலுமிச்சம் சாதம்

தேவை: பச்சரிசி கப்பால் கப்எலுமிச்சம் பழச்சாறு டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் டீஸ்பூன்வேக வைத்த கொண்டைக் கடலை கால் கப்கடுகு டீஸ்பூன்உளுந்துகடலைப் பருப்பு தலா டீஸ்பூன்மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் 3, இஞ்சி துண்டுகறிவேப்பிலை சிறிதளவுஉப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியுடன் பால்மூன்று கப் தண்ணீர்உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். பச்சை மிளகாய்இஞ்சிகறிவேப்பிலை இவற்றை ஒன்றிரண்டாக நசுக்குங்கள். எண்ணெயில் கடுகுஉளுந்துகடலைப் பருப்புமிளகாய் வற்றல்பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுங்கள். பிறகு பச்சை மிளகாய்இஞ்சிகறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிமஞ்சள்தூள்உப்புஎலுமிச்சம் பழச்சாறுகொண்டைக் கடலை ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்குங்கள்.
இந்தக் கலவையோடு சாதத்தை சேர்த்துக் கிளறுங்கள்.

புதினா கத்தரிக்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்பச்சை கத்தரிக்காய் 8, பெரிய வெங்காயம் 1, தக்காளி 2, புளி கரைசல் டேபிள் ஸ்பூன்கடுகுசீரகம்மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
அரைக்க: தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்புதினாமல்லி தலா அரை கட்டுபச்சை மிளகாய் 4, பூண்டு பல்.
செய்முறை: அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரையுங்கள். வெங்காயம்தக்காளிகத்தரிக்காய் இவற்றை நீளவாக்கில்மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய்நெய்யைக் காயவைத்து கடுகுசீரகத்தை தாளித்து வெங்காயம்கத்தரிக்காயைச் சேர்த்துஉப்புமஞ்சள் தூள் தூவி ஐந்து நிமிடம் வதக்குங்கள். பிறகுஅரைத்த விழுதுதக்காளிஉப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி,புளி கரைசலைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
இந்தக் கலவையை சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.

தேங்காய்ப்பால் தக்காளி சாதம்

தேவை: பச்சை பட்டாணி அரை கப்பச்சரிசி கப்தேங்காய்ப் பால் கப்தக்காளி 6, பச்சை மிளகாய் 2, மிளகாய்த்தூள் டீஸ்பூன்மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்உப்பு தேவைக்குகடுகுசீரகம் தலா அரை டீஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசியை சுத்தம் செய்து அதனுடன்தேங்காய்ப் பால்மூன்று கப் தண்ணீர்உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். தக்காளிபச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து கடுகுசீரகம் தாளித்து பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு தக்காளிமஞ்சள் தூள்மிளகாய்த்தூள்உப்புபட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.
சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.
புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

பிஸிபேளா பாத்

தேவை: அரிசிதுவரம் பருப்பு தலா கப்மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்கடுகுஉளுந்து தலா டீஸ்பூன்சின்ன வெங்காயம் கப்தக்காளி 4, பச்சை பட்டாணி அரை கப்வேகவைத்து வழித்தெடுக்கப்பட்ட முருங்கைக்காய் விழுது அரை கப்புளி எலுமிச்சை அளவுகறிவேப்பிலை சிறிதளவுஉப்பு தேவைக்கு.
அரைக்க: தனியா டேபிள் ஸ்பூன்மிளகாய் வற்றல் 8, கடலைப் பருப்பு டேபிள் ஸ்பூன்வெந்தயம் அரை டீஸ்பூன்பட்டைலவங்கம்ஏலக்காய் தலா 1, கசகசா டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசிபருப்புடன் மஞ்சள் தூள்பெருங்காயத் தூள்உப்பு மற்றும் ஆறு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும்மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகுஉளுந்தை தாளித்துவெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளிபட்டாணி சேர்த்து வதக்குங்கள். பிறகு புளி கரைசலைச் சேர்த்துபச்சை வாடை போகக் கொதித்ததும் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துமேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து முருங்கை விழுதை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இதனை வெந்த அரிசி பருப்பு கலவையுடன் கலக்குங்கள்.

கல்கண்டு சாதம்

தேவை: பச்சரிசி கப்பால் லிட்டர்கல்கண்டு கப்ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்கிராம்பு 1, மில்க்மெய்ட் டேபிள் ஸ்பூன்நெய் கால் கப்முந்திரி 10, பாதாம் 8, வெள்ளரி விதை டேபிள் ஸ்பூன்சார பருப்பு அரை டேபிள் ஸ்பூன்கிராம்பு 1, ஜாதிபத்ரி சிறிதளவு.
செய்முறை: அரிசியை ஒரு கப் தண்ணீர்ஒரு லிட்டர் பால் சேர்த்து மிதமான தீயில் வேக வையுங்கள். அடிப் பிடிக்காமல் இருக்கஅவ்வப்போது கிளறிவிடுங்கள். அரிசி வெந்து குழைந்ததும் அதில் கல்கண்டை பொடித்துச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கிளறுங்கள்.
பாதாமை மெல்லிதாக சீவுங்கள். ஏலம்கிராம்புஜாதிபத்ரி ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடித்து வையுங்கள். நெய்யைக் காயவைத்து முந்திரியை வறுத்துவெள்ளரி விதைசார பருப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
கல்கண்டு சாதத்தில் பாதாம்ஏலம்கிராம்புஜாதிபத்ரி பொடிமுந்திரிவெள்ளரிவிதை கலவையைச் சேர்த்துக் கிளறுங்கள்.

சீரக சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப் (பாசுமதி அரிசியாக இருந்தால் கூடுதல் சுவை தரும்)முந்திரி 10, சீரகம் டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுநெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: நெய்யை சூடாக்கி சீரகத்தைத் தாளியுங்கள். பிறகு முந்திரியைச் சேர்த்து இளம் சிவப்பாக வறுத்துகறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து இறக்குங்கள்.
சாதத்தில்சீரகக் கலவைதேவையான உப்பு சேர்த்துக் கலக்கினால் சீரக சாதம் ரெடி.

ஆந்திரா புளியோதரை

தேவை: உதிராக வடித்த சாதம் கப்புளி சிறிய எலுமிச்சை அளவுபச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிதுமஞ்சள் தூள் அரை டீஸ்பூன்உப்பு தேவைக்குவெல்லத் துருவல் டீஸ்பூன்நல்லெண்ணெய் டேபிள் ஸ்பூன்கடுகு ஒன்றரை டீஸ்பூன்உளுந்துகடலைப் பருப்பு தலா டீஸ்பூன்மிளகாய் வற்றல் 4, பெருங்காயம் அரை டீஸ்பூன்.
செய்முறை: சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற்போல வைத்து நடுவில் குழிவாக்குங்கள். அதில் பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி)கறிவேப்பிலைமஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் டீஸ்பூன் கடுகுஉளுந்துகடலைப் பருப்புமிளகாய் வற்றல்பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்துபுளி கரைசலை ஊற்றிஉப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள். பிறகு வெல்லம் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
மீதமுள்ள கடுகை அரைத்து வையுங்கள்.
சாதத்தில் புளி கலவைஅரைத்து வைத்துள்ள கடுகு விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

மாங்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்புளிப்பான மாங்காய் துருவல் கப்பச்சை மிளகாய் 6, பெருங்காயம் டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்கடுகுஉளுந்துதலா அரை டீஸ்பூன்மிளகாய் வற்றல் 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் மாங்காய்த் துருவல் மற்றும் மிளகாயை வதக்கி எடுத்து கரகரப்பாக அரையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில்கடுகுஉளுந்துமிளகாய் வற்றல்பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்துமஞ்சள் தூள் சேர்த்து இறக்குங்கள். இதனை மாங்காய் கலவையோடு சேர்த்து மேலும் ஒரு சுற்று அரைத்தெடுங்கள்.
சாதத்தில்அரைத்த விழுதுதேவையான உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.

தோசைக்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்தோசைக் காய் 1, பச்சை மிளகாய் 6, புளி சிறிய எலுமிச்சை அளவுமஞ்சள் தூள் கால் டீஸ்பூன்கடுகு அரை டீஸ்பூன்மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுஎண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: தோசைக்காயின் தோல்விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தோசைக் காயை வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாய்புளிமஞ்சள் தூள்உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகுமிளகாய்பெருங்காயம்கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில்அரைத்த விழுதுஉப்புகடுகு தாளிதக் கலவை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

பூண்டு சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்சின்ன வெங்காயம் அரை கப்பூண்டு கப்இஞ்சி துண்டுகறிவேப்பிலை சிறிதளவுவறுத்துப் பொடித்த மிளகுத் தூள் டீஸ்பூன்சீரகத் தூள் டீஸ்பூன்மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்கடுகுசீரகம் தலா அரை டீஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் 4, உப்பு தேவைக்கு.
செய்முறை: வெங்காயம்பூண்டுஇஞ்சி இவற்றின் தோலை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்குங்கள். நெய்யில் கடுகுசீரகம்மிளகாய்கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வெங்காயம்இஞ்சிபூண்டு ஆகியவற்றை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கிமிளகுத்தூள்சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இந்த பூண்டுக் கலவையில் சாதத்தைச் சேர்த்துதேவையான உப்பு தூவிக் கிளறுங்கள்.

மாங்காய் மசாலா சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்புளிப்பான மாங்காய் 1, மிளகாய்த் தூள் டீஸ்பூன்கடுகுத் தூள் டீஸ்பூன்நல்லெண்ணெய் டேபிள் ஸ்பூன்கடுகு டீஸ்பூன்நெய் டீஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: மாங்காயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயுடன் மாங்காய்பொடி வகைகள்உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
நெய்யில் கடு-கை பொரித்தெடுங்கள்.
சூடான சாதத்தில் தாளிதக் கலவை மற்றும் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.

சோயா சாதம்

தேவை: பச்சரிசி கப்சோயா உருண்டைகள் அரை கப்பெரிய வெங்காயம் 2, இஞ்சி,பூண்டு விழுது டீஸ்பூன்மிளகாய்த் தூள் டீஸ்பூன்தயிர் அரை கப்கரம் மசாலாத் தூள் டீஸ்பூன்சீரகம் அரை டீஸ்பூன்எண்ணெய்நெய் தலா டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டுமூன்று முறை நன்றாகக் கழுவுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில்சன்னமாக நறுக்குங்கள்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கிசீரகத்தை தாளித்துவெங்காயத்தை வதக்குங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு உப்புதயிர்மிளகாய்த் தூள்கரம் மசாலாசோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். பிறகு அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கிஇரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

அரு நெல்லிக்காய் சாதம்

தேவை: பச்சரிசி கப்அரு நெல்லிக்காய் அரை கப் (அரு நெல்லி என்பது சிறு நெல்லி)பச்சை மிளகாய் 10, தேங்காய்த் துருவல் டீஸ்பூன்பெருங்காயம் டீஸ்பூன்கடுகுஉளுந்துமஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுஉப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள். டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்குங்கள். பிறகுநெல்லிக்காய்மஞ்சள் தூள்சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நைஸாக அரைத்தெடுங்கள்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகுஉளுந்துபெருங்காயம்கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில்நெல்லிக்காய் விழுதுகடுகு தாளிதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

கொண்டைக்கடலை சாதம்

தேவை: பச்சரிசி கப்சிறிய கருப்பு கொண்டைக் கடலை அரை கப்தேங்காய்ப் பால் கப்பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது டேபிள் ஸ்பூன்மிளகாய்த் தூள் டீஸ்பூன்தனியாத் தூள்கரம் மசாலா தலா டீஸ்பூன்எண்ணெய்நெய் தலா டேபிள் ஸ்பூன்பிரிஞ்சி இலை 2, உப்பு தேவைக்கு.
செய்முறை: கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் வேகவைத்து எடுத்து வையுங்கள்.
வெங்காயம்தக்காளியை மெல்லியதாக நறுக்குங்கள்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை காயவைத்துபிரிஞ்சி இலையை தாளியுங்கள். பிறகு வெங்காயம்தக்காளியை வதக்கிஇஞ்சி பூண்டு விழுதுமிளகாய்த் தூள்தனியாத் தூள்கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு தேங்காய்ப் பால்இரண்டு கப் தண்ணீர்தேவையான உப்புவேக வைத்த கடலைஅரிசி ஆகியவற்றைச் சேர்த்து மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கிமேலும் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்குங்கள்.

ஸ்பெஷல் தக்காளி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்பெரிய வெங்காயம் 2, தக்காளி 6, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகைகறிவேப்பிலைமல்லித்தழை தலா சிறிதளவுகடுகுஉளுந்து தலா அரை டீஸ்பூன்நெய் டேபிள் ஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
பொடிக்க (முதல் வகை): பட்டைலவங்கம்ஏலக்காய் தலா 2, கசகசா டீஸ்பூன்முந்திரி 6, எண்ணெய் டீஸ்பூன்.
மற்றொரு வகை பொடிக்கு: தனியாதுவரம் பருப்பு தலா டீஸ்பூன்மிளகாய் வற்றல் 4, கொப்பரை தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்எண்ணெய் டீஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை (இரண்டு வகையையும் தனித்தனியாக) வறுத்து பொடித்து வையுங்கள். வெங்காயம்தக்காளியை பொடியாக நறுக்குங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.
வாணலியில் எண்ணெய்நெய்யைக் காய வைத்து கடுகுஉளுந்தை தாளியுங்கள். பிறகு வெங்காயம்மிளகாய்தக்காளி ஆகியவற்றை உப்புமஞ்சள் தூள் சேர்த்து வதக்கி இறக்குங்கள். சாதத்தில்பொடி வகையை தூவிதக்காளி கலவை மற்றும் கறிவேப்பிலைமல்லித்தழை சேர்த்துக் கிளறுங்கள்.

காய்கறி சாதம்

தேவை: பச்சரிசி கப்காய்கறி கலவை (கேரட் பீன்ஸ்பட்டாணி) கப்பட்டைலவங்கம்ஏலக்காய் தலா 2, பெரிய வெங்காயம் 3, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது டேபிள் ஸ்பூன்தயிர் அரை கப்புதினாமல்லி தலா அரை கட்டுபச்சை மிளகாய் 3, மிளகாய் தூள் டீஸ்பூன்உப்பு தேவைக்குநெய் டேபிள் ஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்.
செய்முறை: குக்கரில் எண்ணெய்நெய்யைச் சூடாக்கி பட்டைலவங்கம்ஏலக்காய்வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள். பின்னர் காய்களைச் சேர்த்து வதக்கிஇஞ்சி பூண்டு விழுதுதயிர்மிளகாய்மிளகாய் தூள்உப்புமஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி ஆறு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அரிசியைச் சேர்த்து கிளறி மூடி வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

உளுந்து பொடி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்எலுமிச்சை சாறு டேபிள் ஸ்பூன்கடுகு டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுநெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
பொடிக்க: முழு உளுந்து டேபிள் ஸ்பூன்துவரம் பருப்பு டேபிள் ஸ்பூன்கொப்பரைத் தேங்காய்த் துருவல் டேபிள் ஸ்பூன்மிளகாய் வற்றல் 8, பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன்எண்ணெய் டீஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றைமிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். நெய்யில் கடுகுகறிவேப்பிலையை தாளித்துப் பொடியோடு சேர்த்துக் கலக்குங்கள்.
சாதத்தில்பொடித்து வைத்துள்ள பொடிஉப்புஎலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறுங்கள்.

வெந்தயக்கீரை சாதம்

தேவை: பச்சரிசி கப்வெந்தயக்கீரை கட்டுதக்காளி 3, வெங்காயம் 2, இஞ்சி துண்டுபூண்டு 10 பல்பச்சை மிளகாய் 4, மிளகாய்த் தூள்மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன்சீரகத்தூள்தனியாத்தூள்கரம் மசாலா தலா டீஸ்பூன்தேங்காய்ப் பால் ஒரு கப்எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: கீரையைச் சுத்தம் செய்யுங்கள். வெங்காயம்தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். இஞ்சிபூண்டுமிளகாய் ஆகியவற்றை நசுக்குங்கள். எண்ணெயில் பூண்டுஇஞ்சிபச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு வெங்காயம்கீரைதக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மீதமுள்ள மசாலாத்தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும்இந்தக் கலவையோடு தேங்காய்ப் பால்நான்கு கப் தண்ணீர்தேவையான உப்புஅரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கிஇரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

ஸ்பெஷல் தயிர் சாதம்

தேவை: பச்சரிசி கப்பால் அரை கப்புளிக்காத புதிய தயிர் இரண்டரை கப்இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது டீஸ்பூன்வெண்ணெய் டேபிள் ஸ்பூன்பெருங்காயம் அரை டீஸ்பூன்கறிவேப்பிலைமல்லித் தழை சிறிதுகடுகு டீஸ்பூன்மிளகாய் வற்றல் 3, பொடியாக நறுக்கிய முந்திரி டேபிள் ஸ்பூன்திராட்சை 15, எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: சாதத்தை குழைவாக வேக வையுங்கள். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்புவெண்ணெய்பெருங்காயம்இஞ்சிபச்சை மிளகாய் விழுதுபால் மற்றும் கறிவேப்பிலைமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
எண்ணெயில் கடுகுமிளகாய்முந்திரிதிராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில் தாளிதக் கலவைதயிரைக் கலக்குங்கள்.

கத்தரி மொச்சை சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்கத்தரிக்காய் 6, காய்ந்த மொச்சை கால் கப்பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்உப்பு தேவைக்குபிரிஞ்சி இலை 2, எண்ணெய் டேபிள் ஸ்பூன்.
அரைக்க: தேங்காய் டேபிள் ஸ்பூன்மிளகாய்த் தூள் டீஸ்பூன்தனியாத் தூள் அரை டீஸ்பூன்இஞ்சி துண்டுபூண்டு பல்சோம்பு அரை டீஸ்பூன்.
செய்முறை: மொச்சைக் கொட்டையை முதல் நாளிரவே ஊற வைத்துமறுநாள் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வையுங்கள். கத்தரிக்காய்வெங்காயம்தக்காளி ஆகியவற்றை மெல்லியதாக நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.
எண்ணெயில்பிரிஞ்சி இலையைத் தாளித்து வெங்காயம்கத்தரிக்காயை மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். காய் முக்கால் பதம் வெந்ததும்தக்காளிஅரைத்த விழுதுமொச்சைக் கொட்டைதேவையான உப்பு சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.
சாதத்துடன் இந்த விழுதைச் சேர்த்துக் கலக்குங்கள்.

கொத்துமல்லி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்கடுகுஉளுந்து தலா அரை டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுநெய் டீஸ்பூன்உப்பு தேவைக்கு.
அரைக்க: மல்லித் தழை கட்டுமிளகாய் வற்றல் 10, உளுந்து டேபிள் ஸ்பூன்பெருங்காயம் சிறு துண்டுபுளி சிறு எலுமிச்சை அளவுஎண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: மல்லித் தழையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயில் பெருங்காயம்மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். பிறகு உளுந்தை வறுத்து எடுத்து தனியே வையுங்கள். பிறகு மல்லித் தழையை வதக்குங்கள்.
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துஅதனுடன் உப்புபுளி சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.
நெய்யில் கடுகுஉளுந்துகறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளியுங்கள்.
சாதத்தில்அரைத்த விழுதுதாளிதக் கலவைஉப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள்.

காய்கறி எலுமிச்சம் சாதம்

தேவை: பச்சரிசி கப்எலுமிச்சம் பழம் 2, கேரட் 1, பீன்ஸ் 10, காலிஃப்ளவர் துண்டுபட்டாணி அரை கப்இஞ்சி துண்டுபச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் டீஸ்பூன்பெருங்காயத் தூள் டீஸ்பூன்கறிவேப்பிலை சிறிதளவுகடுகு அரை டீஸ்பூன்உளுந்து டீஸ்பூன்கடலைப் பருப்பு டீஸ்பூன்முந்திரி 10, எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள். காய்கள்இஞ்சிபச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.
எண்ணெயில் கடுகுஉளுந்துகடலைப் பருப்புமுந்திரி ஆகியவற்றைத் தாளித்து காய்கறிகள்இஞ்சிமிளகாய்பெருங்காயத் தூள்கறிவேப்பிலைசிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் வெந்ததும்எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.
இந்தக் கலவையை சாதத்தில் கொட்டிஉப்பு சேர்த்துக் கிளறுங்கள்.

கூட்டாஞ்சோறு

தேவை: புழுங்கல் அரிசி கப்துவரம் பருப்பு அரை கப்கேரட்கத்தரிக்காய்முருங்கைக்காய்உருளைக்கிழங்கு ஆகியவை தலா 1, வாழைக்காய் பாதியளவுமுருங்கைகீரைஅரைக் கீரைமுளைக் கீரை தலா கைப்பிடிசின்ன வெங்காயம்மிளகாய் வற்றல் தலா 8, பூண்டு பல்கடுகுஉளுந்துசீரகம் தலா டீஸ்பூன்மஞ்சள் தூள் சிறிதளவுதேங்காய்த் துருவல் டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்புளி சிறிய எலுமிச்சை அளவுவடகம் துண்டுஉப்பு தேவைக்கு.
செய்முறை: காய்களை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம்பூண்டுதேங்காய்த் துருவல்மிளகாய்சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். புளியை சிறிதளவு நீரில் கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.
அரிசிபருப்புடன் காய்கள்கீரை வகைகள்மஞ்சள் தூள்உப்புஅரைத்த விழுதுபுளி கரைசல்நான்கு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு மூடி வையுங்கள். விசில் வந்ததும்மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
எண்ணெயில் கடுகுஉளுந்தை தாளித்துவடகத்தைப் பொரித்தெடுங்கள்.
இந்த வடகக் கலவையைச் சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.

காளான் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் கப்காளான் 10, பெரிய வெங்காயம் 1, இஞ்சி துண்டுபூண்டு பல்வெங்காயத் தாள் 2, பச்சை கலர் சில்லி சாஸ் டேபிள் ஸ்பூன்மிளகுத்தூள் டீஸ்பூன்சீன உப்பு அரை டீஸ்பூன்சோயா சாஸ் டீஸ்பூன்எண்ணெய் டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கு.
செய்முறை: வெங்காயம்இஞ்சிபூண்டுகாளான் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாகவும்வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்குங்கள்.
எண்ணெயில் வெங்காயம்இஞ்சிபூண்டு ஆகியவற்றை வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறியதும் காளானைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்கிபிறகு சில்லி சாஸ்சோயா சாஸ்மிளகுத்தூள்சீன உப்புஉப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறுங்கள்.
இந்தக் கலவையில் சாதம்வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.